கருங்குழி
வார்த்தைகள்
உள்ளன என்பதற்காய்,
காலிப் பக்கங்கள்
இருக்கின்றன என்பதற்காய்,
மொழியறிவும் உண்டென
என்பதற்காய்,
எண்ணமென்பதறியாது
கோழி கிளறிய நிலமாய்
சொற்களை வீசிவிட்டு
பின் அதற்குள்
கவிதையைத்
தேடுவதை விட
எண்ணத்தின் அடர்த்தியில்
வார்த்தையின் கனத்தில்
கணங்கள் அமிழ்ந்து கரைய
கருத்து
கனிந்து
கரும்புள்ளியாய்
நிற்கவே
விரும்புகிறது
கவிதை
Black hole
the intensity is
enormous
there is no time
to waste
no words to
mince
no effort to
make
there
stands
my
portry