அந்த வஸ்து அசையாமல் இருந்தது.
கோடான கோடி வருஷம் அப்படியே கிடந்தது
பின்னொருநாள் ஒருவன் வந்தான்
துணி துவைக்க உதவுமென்று வெட்டிச் சென்றான்
அரைக்க உதவுமென்று அம்மியாக்கினான்.
கலைஞன் வந்தான் கல்லில் கன்னியைக் கண்டான்
கற்றோர் வந்த்னர் கல்லில் கடவுளைக் கண்டனர்
குன்றம் என்றது குடைவரைக் கோயிலானது
ஆயினும் கல் அப்படியேதான் இன்றும் உள்ளது.
இன்னும் கோடான கோடி ஆண்டுகளிலும்
அப்படியேதான் இருக்கப்போகிறது.